Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜூன் 01 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், செல்வநாயகம் கபிலன்
'முல்லைத்தீவு பனங்காமம் மூன்றுமுறிப்பு பகுதியில் வீதியோரம் குவிக்கப்பட்டு தீ மூட்டப்பட்ட குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்தமையால் அவ்வழியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் படுகாயங்களுக்குள்ளார்' என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு சம்பவம் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பனங்காமாம் மூன்று முறிப்பு சந்திப்பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கு எதிர்ப்பக்கமாக பாலை மரம் ஒன்றின் அடிப்பகுதியில் குப்பைகளை குவித்து நபரொருவர் தீ மூட்டியுள்ளார்.
அதன்போது, குப்பைக்குள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்ததுள்ளதுடன் அந்த சந்தர்ப்பத்தில், முன்பள்ளியில் தனது பிள்ளையினை விட்டு அந்த வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் படுகாயமடைந்துள்ளார்.
பனங்காமாம் மூன்று முறிப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சுபாஸ்கரன் பகீரதி (வயது 28) என்பவரே இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில், இறுதியுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் காவலரண் ஒன்று நீண்ட நாட்களாக இருந்த நிலையில், பின்னர் அகற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடி விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .