2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Ceylinco Life இன் காப்புறுதிதாரர்கள் டுபாய், சிங்கப்பூர் சுற்றுலா

Gavitha   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ceylinco Life இன் 'குடும்ப சவாரி 9' ஊக்குவிப்புத் திட்டம் நிறைவடைய இருக்கும் வேளையில் காப்புறுதிதாரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சிங்கப்பூர், டுபாய் ஆகிய நாடுகளுக்கு அண்மையில் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஐம்பது காப்புறுதிதாரர் குடும்பங்கள் இந்தப் பயணத்தின் போது செலவுகள் எதுவுமின்றி 3 நாட்கள் சிங்கப்பூரில் பல இடங்களை சுற்றிப் பார்த்தனர். செந்தோசா தீவில் கேபிள் கார் சவாரி, ஆயனயஅ துசோட்ஸ், நீரின் கீழான உலகம், டொல்பினின் சாகசக் காட்சிகள், Wings of Time, நகர சுற்றுலா ஆகியவற்றுடன் சுற்றுலாப் பயணிகள் கடைத் தெருக்களில் பொருட் கொள்வனவையும் செய்தனர்.

10 காப்புறுதிதாரர்களுக்கான 4 நாள் டுபாய் சுற்றுலாவின் போது உலகின் அதிஉயர் கட்டிடமான Burj Khalifa பார்வையிட்டதுடன் இராப் போசனத்துடன் Rustar Dhow Cruise விஜயம் பாலைவன சவாரி, Dubai Gold Souk விஜயம் ஆகியன இடம்பெற்றன. 5 காப்புறுதிதாரர் குடும்பங்கள் இந்த வருட மாபெரும் பரிசான ஜேர்மனிக்கு இம்மாதம் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதோடு Ceylinco Life இன் இவ்வருட 'குடும்ப சவாரி 9' நிறைவடையும்.

ஆயுட் காப்புறுதி வழங்கலை அதிகரித்து காப்புறுதிப் பத்திரங்களை ஒழுங்காக பேணுவோருக்கு பரிசுகளை அளித்து வரும் நிலையில் Ceylinco Life இன் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டம் இலங்கை காப்புறுதித் துறையில் மிகப் பெரும் ஊக்குவிப்புத் திட்டமாக கருதப்படுகிறது. இந்த வருட குடும்ப சவாரித் திட்டத்தில் Ceylinco Life இலிருந்து மொத்தம் 2,260 பேர் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது வரை இத்திட்டத்தினால் மொத்தம் 17,000 பேருக்கும் அதிகமானோர் அனுகூலம் பெற்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .