2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பூர் அனல் மின் நிலையம் வேண்டாம்: எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் அனல் மின் நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று சனிக்கிழமை (25) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

'சம்மந்தன் ஐயாவே சம்பூருக்கு தீர்வென்ன, சோற்றையும் தந்து நஞ்சையும் தருவதா, நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்வுக்கு நாசம், வளமான சம்பூரை சுடுகாடு ஆக்காதே, நிலக்கரி தூசால் மக்களை கொல்லாதே, நல்லாட்சி அரசே மக்களுக்கு பதில் சொல்லு' போன்ற சுலோகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆரம்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .