2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Gavitha   / 2016 ஜூன் 26 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்,எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கலைமகள் வீதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (25) மாலை சிறியரக மோட்டார் குண்டு ஒன்று மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுனத்தின் ஊழியர்கள், தூண் ஒன்றை நடுவதற்காக மடுவினை தோண்டிய போது, இந்த குண்டைக் கண்டுள்ளனர். பின்னர் இது குறித்து திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குண்டு செயழிக்கும் பிரிவினர் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .