2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி இரத்ததானம் செய்யும் நடவடிக்கை நடைபெறவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

காத்தான்குடி வைத்தியர்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி இரத்ததானம் செய்யும் அமைப்புகளினுடைய ஒன்றியத்தில் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இரத்ததானம் செய்யும் நடவடிக்கையில், சுமார் 300 பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த இரத்ததான நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .