Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 26 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகலியகொட நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜீப் வண்டி, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த 39 வயதான பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 6 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் எகலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீப் வண்டியின் சாரதி தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .