2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம்

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, சிலாபத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அத்துகோரல, கல்கிஸைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்கிஸையில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜனக குலதிலக, அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த நிஷாந்த சொய்ஸா, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உதவி பொலிஸ் அத்தியடசகராக கடமையாற்றிய ஆர்.எல்.ரன்தெனிய, கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X