2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாகிஸ்தான் பிரஜைகள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

 2,946 பாபுல் பக்கெற்றுக்களை நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல உத்தரவிட்டார்.

முஹம்மத் அலிஸ் (வயது 44), அக்தார் ரஸீம் (வயது 39) ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் பாகிஸ்தான் கராச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த சந்தேக நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில்  பயணிகள் வெளியேறும் பிரிவில் வைத்து சோதனை செய்தபோதே கட்டுநாயக்க பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து இந்த பாபுல் பக்கெற்றுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த போதை தரும் பாபுல்  பக்கெற்றுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல முன்னிலையில் ஆஜர் செய்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X