2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்திய பிரஜைகள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜூன் 26 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எம்.இஸட்.ஷாஜஹான்

வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் சிகரட்டுக்களையும் கொண்டு வந்த இந்திய பிரஜைகள் இருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல உத்தரவிட்டார்.

அசார்தீன் அரிக்கான் (வயது 25) , முஹம்மத் அன்சாரி (வயது 28) ஆகியோரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சனிக்கிழமை(25) அதிகாலை 4.50 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான 126 ஆம் இலக்க விமானத்தினூடாக குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக 72 மதுபான போத்தல்களையும் 2,100 சிகரட்டுக்களையும் கொண்டுவந்தபோது விமான நிலைய பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X