2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துணுக்காய்க்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்துக்கு, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கல்வி நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பொன்னையா ரவீந்திரன், கடந்த 10ஆம் திகதி முதல், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் துணுக்காய் வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு, மக்கள் பிரதிநிதிகளினால் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனால், வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, விரைவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .