2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மெத்தைக்கு அடியில் வாள்: பூசகரின் மகன் கைது

Sudharshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                  

அரசர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாளொன்றை,  தன்வசம் வைத்திருந்த குற்றஞ்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்;ட பதுளை, ரொக்கிலைச் சேர்ந்த சேனக்க விஜயகுமாரவுக்கு, பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதேவேளை,  குறிப்பிட்ட வாளை தொல்பொருள் திணைக்களத்தில், ஒப்படைக்குமாறு  நீதவான் பணித்தார்.

அபராதம் விதிக்கப்பட்ட நபரின் தந்தையார் பூசகராக இருந்து வந்த வேளையில், பாதுகாப்பு கருதியே, அவ்வாளை தனது மகனிடம் கொடுத்து வைத்ததாக விசாரணையின் போது தெரியவந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .