2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மஸ்தான் எம்.பியின் மனிதாபிமானம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்திய கிராமத்துக்கு, குடிநீரை தான் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிஹிடியா பாம் பழைய குடியேற்ற கிராம மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக ஆற்று நீரைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கிராம மக்களால் பல அரசியல் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாரும் அங்கு செல்லாத நிலையில் அண்மையில் அப்பகுதிக்கு  விஜயம் செய்த கே.காதர் மஸ்தான் எம்.பி, அம்மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தார்.

அத்துடன், தாம் மல்வத்து ஓயா ஆற்றை அண்டியவாறாக பல தசாப்தங்களுக்கும் மேலாக குடியிருப்பதாகவும் இதுவரை காலமும் தாம் குடிப்பதற்கு ஆற்று நீரையே பயன்படுத்துவதாகவும்   அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறித்த கிராம மக்களுக்கு முதற்கட்டமாக ஒரு மாத காலத்துக்குள் குழாய்க்கிணறு ஒன்றைத் தனது சொந்தச் செலவில் அமைத்துத் தருவதாக மஸ்தான் எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .