2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முள்ளம்பன்றி ஜோடியை இறைச்சியாக்கியோர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயானத்தில், பாதுகாப்புக்காக தோண்டிக்கொண்ட சுரங்கத்துக்குள் இருந்த ஒருஜோடி முள்ளம்பன்றிகளை கொன்று, இறைச்சியாக்கிய இருவரை, இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்துள்ளதாக மொரோந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு, மொரோந்துடுவ, மாவல மயானத்திலேயே குடிபுகுந்திருந்த முள்ளம்பன்றி ஜோடியை அவ்விருவரும் பிடித்துஇழுத்து கொன்று இறைச்சியாக்கியுள்ளனர்.

முள்ளம்பன்றிகளின் இறைச்சியைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .