2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிலைகளை கடத்த முற்பட்ட சீனப் பிரஜைகள் கைது

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி வாய்ந்த 3 பழைமையான தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டு செல்ல முனைந்த சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் இன்று புதன்கிழமை அதிகாலை சீனாவுக்கு செல்ல தயாராக இருந்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பிள்ளையார் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் 40 வயதான ஆணொருவரும் பெண்ணொருவரும் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுங்க பிரிவினரும் தொல்பொருளியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .