2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முக்கிய சாட்சி வெளியானது

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் முக்கிய சாட்சியயொன்று வெளிவந்துள்ளதாகவும், அந்தச் சாட்சியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தச் சாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில், இன்று புதன்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இதனைத் தெரிவித்தனர்.

'விசாரணை மேற்கொள்ளப்படும் சாட்சி விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் அதேவேளை, இந்த வழக்குத் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள், தாமாக முன்வந்து தகவல்கள் தந்தால், விசாரணையை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்' எனவும் குற்றப்புலனாய்வு பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .