2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மர்ம உறுப்பை பிடித்த அதிபர் கைது

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து அமுக்கிய அதிபரை யாழ்ப்பாணம் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்துள்ளனர்.

முதல்நாள் பாடசாலைக்கு வருகை தராதமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த மாணவனை அதிபர் அழைத்துள்ளார்.

இதன்போது, வருகை தந்த மாணவனிடம்  விசாரணை செய்துகொண்டிருந்த அதிபர், அம் மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து அமுக்கியுள்ளார்.

இது தொடர்பில் மாணவன் தனது தாயாருக்கு கூறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவில், மேற்படி சம்பவம் குறித்து மாணவனின் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் அதிபரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .