2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

Gavitha   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரிவின்  ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, உருகுலைந்த நிலையில் இருந்த சடலமொன்றை, மன்னார் பொலிஸார் புதன்கிழமை (29) மீட்டுள்ளனர்.

றொபட் பெரேரா என்ற 17 வயது இளைஞனுடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

எழுத்தூர் பகுதியிலுள்ள கடையொன்றில் தொழில் புரிந்து வரும் குறித்த இளைஞனின் தாய், வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தனது தந்தை மற்றும் தம்பியுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 01ஆம் திகதி தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையுடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளான்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) காலை நண்பர்களுடன் இருந்துவிட்டு, ஜூவபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையாக இருந்துள்ளார். குறித்த வீட்டுக்குச் சென்ற பின்னர் யாருடனும் கதைக்கவில்லை என்பதால், அவர் குறித்து இளைஞனது தந்தையிடம், அவருடைய நண்பர்கள் விசாரித்து பார்த்துள்ளனர்.

தன்னுடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் நண்பர்களுடன் எங்கேனும் சென்றுவிட்டு திரும்பி வருவான் என்றும், இளைஞனது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூவபுரம் பகுதியில் சில நாட்காக பூட்டியுள்ள வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, மன்னார் பொலிஸூக்கு பிரதேச மக்களால் புதன்கிழமையன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ  இடத்துக்கு விரைந்த பொலிஸார், உருகுலைந்த நிலையில் இருந்து இளைஞனது சடலத்தை மீட்டுள்ளனர். இது தொடர்புடைய விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .