2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மஹிந்தவை ஜனாதிபதியாக்க 'பிரபாகரனும் உதவினார்'

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அப்போதைய ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத் தேவை இருந்தது. எனவே தான் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்க, அவரும் எமக்கு உதவினார்' என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பற்றிய கருத்தை வெளியிடுவதற்கு, பசில் ராஜபக்ஷவுக்கு எந்தவொரு தகுதியும் கிடையாது. கடந்த காலங்களில் பல அடிகளை நாம் வாங்கும் போது, பசில் ராஜபக்ஷ எம்முடன் இருக்கவில்லை. ராஜபக்ஷவின் குடும்பத்தாலேயே அவர் இம்முறை தேர்தலில் தோற்றார்' என்று அவர் கூறினார்.

'இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே, பசில் ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு முயற்சிக்கின்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X