2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா 06 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன்,  06 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று  வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவர்களில்  ஒருவரை 300 மணித்தியாலங்கள் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸாரால் குறித்த நபர்கள் நேற்று (30) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .