2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா...' இருமுகனின் வித்தியாச ஆர்வம்

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், 'சாதாரண கதையாக இல்லாமல் ஏதாவது புதுமையானதாக முக்கியமாக, வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும்படியான கதைகளாக சொல்லுங்கள்' என்கிறாராம் நடிகர் விக்ரம்.

தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கெட்டப்புகளில் அதிகமாக நடித்திருப்பவர் விக்ரம்.

அந்த வகையில், „சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ, தெய்வத்திருமகள்... என பல திரைப்படங்களில் அவர் உடலை வருத்தி மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்தார்.

ஐ திரைப்படத்துக்காக அடையாளமே தெரியாத அளவுக்கு அவர் தனது உடலை மெலிய வைத்து நடித்திருந்தார்.

இருமுகன்-இல் இரண்டை வேடங்களைத் தொடர்ந்து, அடுத்தபடியாக கருடாவில் நடிக்க தயாராகி விட்ட அவர், அதற்கடுத்து நடிப்பதற்காகவும் அவ்வப்போது புதிய கதைகள் கேட்டு வருகிறார்.

அதனால் விக்ரமை இன்னும் எந்தமாதிரியான வித்தியாசமான கோணங்களில் வெளிப்படுத்தலாம் என்று சில இயக்குநர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X