2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Sudharshini   / 2016 ஜூலை 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஜூன் 4 ஆம் திகதி நெடுந்தீவுக்கு மேற்குப் பகுதியில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஜூன் மாதம் 15ஆம் திகதி காரைநகர் கற்கோவளம் பகுதியில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களும், இம்மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும், இம்மாதம் 5 ஆம் திகதி காரைநகரில் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களுக்குமே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X