2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

குழாய் துண்டு சிக்கியதில் சிறுமி பாதிப்பு

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை, மீகாகியுலவை பகுதியைச் சேர்ந்த டி.எம்.ஹசினி (வயது 11) என்ற சிறுமியின் தொண்டையில் குழாய் துண்டொன்று குத்தியதினால், அவர் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (21) மாலை, குழாய் துண்டொன்றினை வாயில் போட்டுக்கொண்டு குறித்த சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக குறித்த குழாயிலிருந்த சிறிய துண்டொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி, மீகாகியுல அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக  பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .