Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Kanagaraj / 2016 ஜூலை 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
நாடுதிரும்பிய காதலியை விமான நிலையத்தில் வரவேற்கும் போது அவருக்கு இன்ப அதிர்சி கொடுப்பதற்காக விமானநிலைத்திற்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமாநிலைய பொலிஸார், இன்று சனிக்கிழமை(23) காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் காதலி, கட்டாரிலிருந்து இன்றுக்காலை 11 மணிக்கு நாடு திரும்பினார்.
அவரை வரவேற்பதற்கான அப்பெண்ணின் காதலனான 28 வயதான இளைஞன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை வரவேற்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.
கொழும்பு 12 யைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதிக்கு சென்றதுடன், தான் கொண்டுச் சென்ற பர்தாவை, விமான நிலையத்தின் மலசலக்கூடத்துக்கு சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேற்கும் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டார்.
இவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படவே விமானநிலைய புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், நாடு திரும்பிய கைது செய்யப்பட்டவரின் காதலியை புலனாய்வு பிரிவினர் அழைத்துவந்து இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பின்னர் கட்டுநாயக்கா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவர்கள், தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .