2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிரந்தரமாக செயலாளரை நியமிக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, பொத்துவில் பிரதேச சபைக்கு நிரந்தரமாக செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்; காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் வாஸீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கோரிக்கை விடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கு சனிக்கிழமை (23) கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பிரதேச சபையில் நிரந்தரமாக  செயலாளர் ஒருவர் இல்லாமையால், பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் அசமந்தப்போக்கில் காணப்படுகிறது. அத்துடன், உரிய நேரத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் காலதாமதத்தை எதிர்நோக்குவதாகவும்  அவர்; கூறினார்.  

கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதல் இன்றுவரை இப்பிரச்சினைக்கு பொதுமக்கள் முகங்;கொடுத்து வருகின்றனர்.
ஆகவே, பொத்துவில் பிரதேச சபையில் தற்காலிகமாக கடமையாற்றுகின்ற செயலாளருக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும். அல்லாவிடின், இப்பிரதேச சபைக்கு வேறொருவரை நிரந்தரமாக  நியமிக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .