2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இராணுவத்தினர் நிர்மாணித்த வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், கடந்த 2012ஆம் ஆண்டு இராணுவத்தினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளை காரணங்காட்டி, நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு அதிகாரிகள் மறுத்து வருவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

இராணுவத்தினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றில்  வசிக்க முடியாதுள்ளதாகக் கூறியே, தங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரோக்கியபுரம், அமைதிபுரம் ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் பகுதியிலும்,இராணுவத்தினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நிரந்தர வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஏற்கெனவே இராணுவத்தினரால் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் தொடர்பான பதிவுகளைக் காண்பிக்கும் அதிகாரிகள், தற்போதய வீட்டுத்திட்டத்தின் கீழ், நிரந்தர வீடுகளை வழங்க மறுப்பதாகவும் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் சுவர்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதோடு, கூரைகளும் சேதமடைந்து காணப்படுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இதுவரையில் வீட்டுத்திட்டங்களைப் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக, வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தும் அதிகாரி ஒருவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .