2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூங்காவுக்குச் சென்ற பெண்ணை புலி கொண்டுச்சென்றது (VIDEO)

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் புலியிடம் சிக்கிய தனது மகளை மீட்கச் சென்ற தாய், வேறொரு புலியினால் தாக்கப்பட்டு இறந்த பரிதாப சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

பூங்காவில் சைபீரியன் புலிகள் பராமரிக்கப்படும் பகுதியில் பார்வையாளர்கள் கார்கள் நிறுத்தவோ, இறங்கி நடக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும், சில தினங்களுக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காரொன்று வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கிய இளம்பெண் ஒருவர், கீழே இறங்கி வீதியில் நின்றபடி காருக்குள் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென புலி ஒன்று பாய்ந்து வந்து அவரை தாக்கி இழுத்துச் சென்றது. இந்தக் காட்சியைக் கண்டு பதறிய இளம்பெண்ணின் தாயாரும் மற்றொருவரும் அலறியடித்தபடி அப்பெண்ணை மீட்க புலியைத் துரத்திச் சென்றனர்.

அப்போது, மகளை மீட்க  சென்ற தாயை வேறொரு புலி கடுமையாகத் தாக்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இளம்பெண், தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X