2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெடிபொருள் வைத்திருந்தவருக்குப் பிணை

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, மொரவெவப் பிரதேசத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருளை அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு நீதமன்றம் அனுமதியளித்தது.

குறித்த நபரை, குச்சசெளிப் பொலிஸார் கைதுசெய்து இன்று புதன்கிழமை (27) குச்சவெளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் பெர்ணான்டோ இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.

குறித்த நபருக்கு முதலில் 5 ஆயிரம் ரூபாய் அபராபதம் விதிக்கப்பட்டது. எனினும், 3 ஆயிரம் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டதால் 10 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .