2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 29

Menaka Mookandi   / 2016 ஜூலை 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1948: இரண்டாம் உலக யுத்தம் காரணமாக, 1936 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெறாதிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டி லண்டனில் மீண்டும் ஆரம்பமாகியது.

1957: சர்வதேச அணுசக்தி முகவரகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1958: நாசா நிறுவனத்தை அமைப்பதற்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டி.ஐசனோவர் கையெழுத்திட்டார்.

1967: வெனிசூலாவில் பூகம்பத்தினால் 400 பேர் பலி.

1981: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987: ஆங்கிலக்கால்வாய்க்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தல் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர், பிரெஞ்சு ஜனாதிபதி மிட்டரான்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1987: இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையெழுத்திட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X