2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்              

திருகோணமலை பிரதேசத்தில் பெண்ணொருவரின் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாக கூறப்படும் போயாகம,கலிகமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடை நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.                                                 

மேற்படி நபர் செவ்வாய்கிழமை (26) மாலை  வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் 45,000ம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில்  உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்;ந்து பொலிஸார்  சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (26) கைதுசெய்ததுடன் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X