2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இனந்தெரியாதோரால் லொறி தீக்கிரை

Princiya Dixci   / 2016 ஜூலை 30 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளி 15ஆம் கொளனிப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) அதிகாலை 04.00 மணியளவில், டாட்டா ரக லொறி இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையொன்றுக்கு முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாவிதன்வெளி 15ஆம் கொளனியை சேர்ந்த பீ.தயாபரன் என்பவரின் லொறியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .