2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காயமுற்ற நிலையில் மரை மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 30 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

வெலிஒயாப் பகுதியில் காயமுற்று உபாதைக்குள்ளான நிலையில் மரையொன்றை, இன்று சனிக்கிழமை (30) காலை 11 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேச மக்களினால் வட்டவளைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த மரை மீட்கப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியிலிருந்து இரை தேடித் திரிந்துகொண்டிருந்த போது நாய்க் கடிக்குள்ளாகியிருக்காலாம் அல்லது இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமுற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிப்பதுடன், மீட்கப்பட்ட மரையை, ஹட்டன் மிருக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .