2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 22

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1639: சென்னை நகரம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது.

1642: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ், ஆங்கில நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1717: ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர்.

1770: ஜேம்ஸ் குக், தனது ஆட்களுடன் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான்.

1780: கெப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல்(HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது.(ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).

1798: ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர்.

1831: வேர்ஜீனியாவில் நாட் டர்னர், தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

1848: நியூ மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1849: வெனிஸ் நகரம் மீது ஆஸ்திரியா ஆளற்ற பலூன்மூலம் முற்றுகையிட்டது. உலகின் முதல் ஆகாய மார்க்கமான முற்றுகை.

1860: பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள், சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.

1864: 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.

1875: சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென். பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.

1910: கொரியா - ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

1911: பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1914: முதலாம் உலகப் போர் - பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர்.

1926: தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1932: தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பீ.பீ.சி சோதித்தது.

1941: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1942: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனி மீது பிரேசில், போரை அறிவித்தது.

1944: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம், ருமேனியாவைக் கைப்பற்றியது.

1949: கனடாவில் 8.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியது.

1962: பிரெஞ்சு அதிபர் சார்ள்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1964: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

1875: சகாலின் மற்றும் குரில் தீவுகளின் பரிமாற்றம் தொடர்பாக ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் சென் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1902: தியோடர் ரூஸ்வெல்ட், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

1910: கொரியா, ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.

1914: முதல் உலகப்போரில் பிரித்தானிய, ஜேர்மனிய படைகள் முதல் தடவையாக பெல்ஜியத்தில் மோதின.

1972: ரொடீசியா, ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1978: சண்டினீஸ்டா படைகள், நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.

1985: பிரிட்டனின் மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 55 பேர் பலியாகினர்.

1989: நெப்ரியூன் கிரகத்தின் முதல் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .