2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணிக்கப் பிள்ளையார் கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

அம்பாறை ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா, செப்டெம்பர் 05ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளதாக அக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், செப்டெம்பர் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பூஜையைத் தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர்வீதி வலம் இடம்பெறுமெனவும் செப்டெம்பர் 5ஆம் திகதி மாலை விசேட பூஜையுடன் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சங்காபிஷேகம் நடைபெறும். வைரவர் பூஜையுடன் சகல நிகழ்வுகளும் நிறைவு பெறுமென நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .