2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெரியாததைக் கேட்டு அறிக...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதனைக் கேட்டாலும் தெரியாது, தெரியாது எனச் சொல்பவர்களைப் பார்த்தால் எரிச்சல்தான் வரும்.

இப்படிச் சொல்பவர்களில் பலர் பல விதத்தில் இருப்பார்கள். எவராவது எதனைப் பற்றியாவது கேட்டுவிட்டால், அவர்கள் தங்களிடம் ஏதாவது உதவிகேட்டு விடுவார்களா எனும் எண்ணத்தில், இது பற்றியே தெரியாது என்பவர்கள் ஒருரகம். இவர்கள் உதவி செய்யாத சுயநல வாதிகள். ஆனால், உண்மையிலேயே எதனையும் புரியாமலேயே அறியாமையுடன் புரண்டுவரும் பிரகிருதிகள் இன்றும் ஒரு ரகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

ஆனால், எல்லாமே தெரியும் என நடிப்பதும் தங்களுக்கே எல்லாமே தெரியும் என்ற நினைப்புடன் இருக்கும் மனிதர்களும் ஏராளமாக எங்கள் மத்தியில் உளர். இத்தகையோரிடம் சென்று ஆலோசனை கேட்பதே ஆபத்துத்தான்‚ எங்கள் நலனில் அக்கறையுள்ள நல்லோரிடம் ஆலோசனைகளை, ஒத்துழைப்பினைக் கோருவதே உகந்ததாகும்.

தெரியாததைக் கேட்டு அறிக; மமதை வேண்டாம்.  

வாழ்வியல் தரிசனம் 23/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .