2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

Apexaura விற்பனையாளர்களுக்கு விருது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேதன உணவு உற்பத்தி நிறுவனமான Apexaura INT தனியார் நிறுவனம் விற்பனையில் சாதனைப் புரிந்த தமது அதி சிறந்த சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் கௌரவிக்கும் வகையில் கோலாகலமான விருது வழங்கும் விழாவொன்றை சிறப்பு விருந்தினர்கள் பலரின் பங்கேற்புடன் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தியது.

அதன் போது சிறந்த விற்பனை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கி அவர்களை மேலும் ஊக்குவித்தது.Apexaura நிறுவனத்தின் வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு பூர்த்திக்கு நேர் ஒத்ததாக இவ் விழா நடாத்தப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Apexaura INT தனியார் நிறுவனம் குறுகியக் காலப்பகுதியில் நம்பிக்கை மிக சிறந்த உற்பத்திகள் மற்றும் துரிதமான நேரடி சந்தைப்படுத்தல் செயன்முறையொன்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று தனது சந்தையை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளது.

வேலைப்பழு மிக்க வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ள ஆநேகமான இலங்கையர்களின் ஆரோக்கியம் பெரும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் ஆரோக்கியத்துடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உந்துச்சக்தியாக அமையக்கூடிய தாவரச்சாற்றின் குணமிக்க பல்வேறு உற்பத்திகளை Apexaura நிறுவனம் கொண்டுள்ளது. ஆரோக்கியத்தை கட்டியெழுப்பும் சேதன உணவுக் குறைநிரப்பி உற்பத்திகள் பல அதில் அடங்கும். அதற்காக Apexaura நிறுவனத்துக்கு ISO 9001:2008, ISO 22000:2005, HACCP, GMP என்ற சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

'சர்வதேச தேவையைப் பூர்த்தி செய்வதுக்கு எமது நிறுவனம் எதிர்காலத்தில் இந்த அரிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதுக்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு சந்தையை வென்றெடுத்த எமது குழுவினருக்கு சர்வதேச சந்தையையும் வெற்றி கொள்ள முடியும்.' என Apexuara நிறுவனத்தின் தலைவர் சீக்ஷன குணவர்தன தெரிவித்தார்.

Apexuara நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஆரம்பிப்பதுக்;கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .