2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றிய மூவருக்கு அபராதம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய மூவருக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்;டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவரைக் கைது செய்;து அவருக்கு எதிராக வழக்குப்;பதிவு செய்;த பொலிஸார் குறித்த நபரையும் உழவு இயந்திரத்தினையும் புதன்கிழமை (24) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை பளைப்பகுதியில் அனுமதிப்;பத்;திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற இரு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் கைது செய்;த பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்;றில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு சென்றவருக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்;பட்டதுடன், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்றவருக்கு 75 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X