Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய மூவருக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்;டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவரைக் கைது செய்;து அவருக்கு எதிராக வழக்குப்;பதிவு செய்;த பொலிஸார் குறித்த நபரையும் உழவு இயந்திரத்தினையும் புதன்கிழமை (24) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.
இதேவேளை பளைப்பகுதியில் அனுமதிப்;பத்;திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற இரு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் கைது செய்;த பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்;றில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு சென்றவருக்கு 80 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்;பட்டதுடன், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்றவருக்கு 75 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .