2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போக்கிமொன் கோ விளையாடிய ட்ரக் சாரதி பாதசாரியைக் கொன்றார்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்கிமொன் கோ விளையாடிக் கொண்டு ட்ரக்கைச் செலுத்திய ஜப்பானியச் சாரதியொருவர், பெண்மணிகள் இருவரை மோதி, ஒருவரைக் கொன்றதுடன் ஒருவரைக் காயமடைய வைத்துள்ளார். போக்கிமொன் கோ விளையாட்டு பற்றிய ஆர்வத்துடன் ஜப்பானில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவேயாகும்.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தைத் தொடர்ந்து, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட குறித்த சாரதி, போக்கிமொன் கோவால் தனது கவனம் திசைதிரும்பியதாக தெரிவித்ததாக டொகுஷிமா நிர்வாகப் பொலிஸ் பேச்சாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போக்கிமொன் கோவை உருவாக்கிய நின்டென்டாவின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வேகம் அதிகரிக்கையில், போக்கிமொன் கோ திரையில் பொப்-அப் ஒன்று வந்து, விளையாடுபவர் வாகனத்தைச் செலுத்தவில்லை என்று உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .