Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டவை என சந்தேகிக்கப்படும் 30 துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை சுத்திகரிக்கும் போது குறித்த துப்பாக்கிகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதை அவதானித்த காணி உரிமையாளர், ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் எல்.எம்.யி ரக துப்பாக்கிகள் 30ஐ மீட்டுள்ளனர்.
இனி பயன்படுத்த முடியாத நிலையில் குறித்த துப்பாக்கிகள் காணப்படுவதுடன் நீதிமன்ற அனுமதிப் பெற்று திங்கட்கிழமை(29) குறித்த இடத்தை தோண்டவுள்ளதாக ஓமந்தை பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .