2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தொழிற்சங்க பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி தெரிவு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய பிராந்தியத்துக்கான தொழிற்சங்க பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான அங்கத்தவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும், மகளீர் இயக்குநரமான திருமதி அனுசியாசிவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவராக இ.தொ.கா தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தொடர்ந்தும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 23, 24ஆம் திகதிகளில் தெற்காசிய தொழிற்சங்க பொதுச்சபை கூட்டம் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே திருமதி அனுசியா சிவராஜாவுக்கு இப்பதவி வழங்கப்பட்டிருப்பதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X