2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உபாலி தென்னகோன் தாக்குதல்: இராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார்

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவ அதிகாரி, அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி  இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அடையாள  அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.

பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரின் மனைவியால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தன் மீதான தாக்குதல் குறித்த கடந்த காலத்தில் நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும் காலம் கடந்தாவது விசாரணை இடம்பெறுவதை வரவேற்பதாகவும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் உபாலி தென்னக்கோன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .