2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டியில் ஆடுகளை ஏற்றிச் சென்றவருக்கு பொலிஸ் பிணை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மிரிஸ்வௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் முச்சக்கரவண்டியில் இரண்டு ஆடுகளை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதியை, நேற்றுச் சனிக்கிழமை (27) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, அத்தாபெந்திவெவ வீதியைச்சேர்ந்த எச்.இஷாக் (39 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முற்சக்கர வண்டியும் இரண்டு ஆடுகளும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள பொலிஸார், அவரை, எதிர்வரும் 30ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .