2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகச் குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

ஒன்பது வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 60 வயதுடைய ஒருவரை  எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும்  மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, சனிக்கிழமை (27) உத்தரவிட்டார்.

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வீதியில் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவனை மேற்படி நபர், தனது வீட்டுக்கு  அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட அச்சிறுவனின் தாய், பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு இச்சந்தேக நபரைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X