2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தீ விபத்தில் கொட்டில் கடை எரிந்து நாசம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி -02 மௌலானா கபுறடி வீதியை அண்டியுள்ள தகரக்கொட்டில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையும் அதனுள்ளிருந்த பொருட்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தகரக் கொட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கும் மின்சார சபைக்கும் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்ததுடன் அங்கு வருகை தந்த பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் அருகிலுள்ள சைக்கிள்கள் திருத்தும் கடையும் சிறியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
எரிந்து போன  தகரக் கொட்டில் கடலை வண்டி வியாபாரி ஒருவரினால் சில காலமாக உணவு தயாரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துகச் காரணமாக சிறுகடை வியாபாரிக்கு சுமார் 20,000 ரூபாய் வரை நட்டம்  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் இவ்விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .