2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியின் 12 பேருக்குப் பெருந்தடை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவதில், சட்டப் பிரச்சினை உள்ளதால், தான் உள்ளிட்ட 12 பேர், அக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக முடியாதுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பில், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் கூறிய மஹிந்தானந்த எம்.பி, எதிர்காலத்தில், ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

எவ்வாறாயினும், கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து தங்களது விருப்பத்தின் பேரில் விலகுபவர்களது கட்சி உறுப்புரிமையும் நீக்கப்படும் தீர்மானமொன்றும் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .