2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவர் அறிஞர், மேதாவியாக உருவாகுவதற்கு அவரது ஆசிரியர், பெற்றோர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது.

அமைதியான சுற்றுச் சூழலும் முக்கிய காரணமாகும். எதிர்வீட்டுச் சண்டை, சதா ஒலிபெருக்கிகளின் பலத்த ஓசை போன்ற அமைதியற்ற சூழல் மாணவர்களை மட்டுமல்ல, சாதாரணமான சகல பிரஜைகளையும்; திக்குமுக்காட வைக்கின்றது.

சுற்றுப்புறத்தில் அல்லது வெளியே வாசம் செய்யும் சிலர், கல்வி கற்பவர்களைக் கண்டால் பிடிக்காத நபர்களைப் போல் விஷத்தைக் கக்குவார்கள். உதவி புரியாத உபத்திரவவாதிகள் இவர்கள்.

பொறாமையற்ற, பரந்த மனப்பான்மையுடைய நல்ல இதயம் கொண்டோர் வாழும் இடம் தூய்மையுடன் துலங்கும். பிள்ளைகள் அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்.  

வாழ்வியல் தரிசனம் 29/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X