2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நல்லூர் தேரை முன்னிட்டு வரபிரசாதம்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை (30), நாளை மறுதினம் (31) மற்றும் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை நாளாந்தம் பயணிக்கும் 4021ஆம் இலக்கத்தை கொண்ட நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலாம் வகுப்பில் குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள் இணைக்கப்படும்.

அதேபோல, காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை ரயில் நிலையம் வரையிலும் நாளாந்தம் பயணிக்கும் 4022ஆம் இலக்கத்தை கொண்ட நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், முதலாம் வகுப்பில் குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள் இணைக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X