2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அநுராதபுரத்தில் மீண்டும் களனி விசுர

Gavitha   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபிள்ஸ் பிஎல்சி முன்னெடுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையான 'களனி விசுர', அநுராதபுரம் - ரஜரட்ட ஹோட்டலில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

களனி கேபிள்ஸ் பி.எல்.சியின் சமூக பொறுப்புணர்வு செயற்றிட்டமாக தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக 'களனி விசுர' ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் பரந்து காணப்படும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு துறையில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிளான களனி கேபிள், இலங்கைத் தயாரிப்பாக அமைந்துள்ளதுடன், களனி கேபிள்ஸ் பி.எல்.சியால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
அநுராதபுரத்தில் நடைபெற்ற 'களனி விசுர' பயிற்சிப்பட்டறையை, களனி கேபிள்ஸ் பி.எல்.சியின் விற்பனை பொறியியலாளர் சஞ்ஜீவ குணதிலக முன்னெடுத்திருந்தார். இந்த நிகழ்வில், 150க்கும் அதிகமான இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றுக்கான தரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வயர்களை தெரிவு செய்வது, தூரத்தை கவனத்தில் கொண்டு இல்லங்கள் மற்றும் கட்டடங்களில் ப்ளக் பொயின்ட்களையும் சுவிட்ச்களையும் பொருத்துதல், விளக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து வயர்களை தெரிவு செய்தல், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்தல் மற்றும் வயர்களை பதிதல் பற்றிய விடயங்கள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கு உணவு வேளைகள் மற்றும் பான வகைகள் போன்றன வழங்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

'களனி விசுர' திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு அவசியமான வயர்களை பதிதல் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், இதன் மூலமாக போட்டிகரத்தன்மை வாய்ந்த சூழலில் பங்குபற்றிய இலத்திரனியலாளர்களுக்கு மின் கட்டமைப்புகளை பொருத்தும் ஆளுமை சேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .