2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவன் சிறுவர் இல்லத்தில்: இளைஞன் விளக்கமறியலில்

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் (ஊடுருவினார்) செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அதன்போது கைதுசெய்யப்பட்ட மாணவனை, சிறுவர் இல்லத்தில் எதிர்வரும் 2ஆம் திகதிவரை தடுத்து வைக்குமாறும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹெக் செய்த சம்பவம் தொடர்பில் கடுகன்னாவையில் வைத்து 17 வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில்,  மொரட்டுவையைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபரொருவரை, இன்று பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்து,  'இலங்கை இளைஞர்கள்' என்ற பெயரில் தகவலொன்று பதிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .