2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பவுன் களவாடிய சாஸ்திரப் பெண்ணுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை களவாடிச் சென்ற சாஸ்திரம் பார்க்கும் பெண்ணுக்கு எதிர்வரும் 6 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, இன்று செவ்வாய்க்கிழமை (30),மூதூர் நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை, சேருநுவர, சோமாவதி பகுதியில் வைத்துப் பஸ் வண்டியில் ஏறுவதற்கு முற்பட்ட பெண் ஒருவரின் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 2 பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற 36 வயதுடைய வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவரை விளக்கமறியலலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து வழங்கிய முன்னுக்குப் பின் முரணான தகவலையடுத்து அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .