2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலுவலகம் மட்டக்களப்பில் அமையவேண்டும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

-எஸ். பாக்கியநாதன்

காணமற்போனோர்களின் உண்மைகளைக் கண்டறியும் மாவட்ட அலுவலகம் மட்டக்களப்பில் அமையவேண்டும் எனவும் காணாமற் போனோர்களின் உண்மைத் தகவல்கள் கண்டறியப்படவேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் எதிரே ஆர்ப்பாட்டமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதி வேண்டும் மற்றும் காணாமல் போனோருக்கு வழங்கப்பட்டவிருக்கும் மரணச் சான்றிதழ்களை ஏற்க முடியாது எனும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலக அதிகாரி ஏ.சி.எஸ்.அஸீசிடம் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .